பட்டிவீரன்பட்டி, ஜூலை 30: 2ம் ஆடி வெள்ளியை முன்னிட்டு, பட்டிவீரன்பட்டி பகுதியில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
பட்டிவீரன்பட்டி சுயம்பு நாகேஸ்வரியம்மன் கோயிலில் ஆடிமாத 2&ஆம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு யாகவேள்வி பூஜைகளும் அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. பெண்கள் வளையல், தாம்பூலம் வைத்து பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கினர். அதனைத் தொடர்ந்து சுயம்பு நாகேஸ்வரியம்மனுக்கு வெள்ளி கவசத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.