சிங்கம்புணரி, ஜூலை 28: ஒளிமிகு பாரதம், ஒளிமயமான எதிர்காலம் என்னும் மின்சாரப் பெருவிழா ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த பங்கேற்புடன் ஜூலை மாதம் 25ம் தேதி முதல் 30ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சிங்கம்புணரியில், நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரிய கருப்பன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி முன்னிலை வகித்தார். அமைச்சர் பேசும்போது, மின்சாரம் என்பது மக்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்து விட்டது.