தஞ்சாவூர், ஜூலை 27: தஞ்சாவூரில் நேற்று கன மழை கொட்டித் தீர்த்தது. இதில் அதிகபட்சமாக கீழ் அணைக்கட்டில் 130.60 மி.மீட்டர் பதிவானது. தமிழகத்தில் கிழடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் இரவு நேரங்களில் மழை பெய்கிறது. தஞ்சை, திருச்சி, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், கரூர், சிவகங்கை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து கொண்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 25ம் தேதி இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. தஞ்சை, மாரியம்மன் கோவில், அம்மாபேட்டை, சாலியமங்கலம், ஒரத்தநாடு, கண்டியூர், திருவையாறு, வல்லம், போன்ற பகுதியில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக கீழ்அணைக்கட்டில்-130.60 மீ.மி மழையும், குறைந்தபட்சமாக திருக்கட்டுப்பள்ளி பகுதியில் 1.20 மி.மீ, மழை பதிவாகியுள்ளது.