மதுரை, ஜூன் 25: மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை வடக்கு ஆவணி மூல வீதியில் உள்ள அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சுந்தரராஜபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் உள்ள வெள்ளி வீதியார் மாநகராட்சி பெண்கள் பள்ளிகளில் 10,12ம் வகுப்பு அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசுகள், கல்வி உபகரணங்கள், டிபன் பாக்ஸ் வழங்கும் விழா நேற்று நடந்தது. அமைச்சர் பிடிஆர் பழனிவேல்தியாகராஜன் கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு அவற்றை வழங்கினார். மேலும் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் பணியினை பாராட்டி வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.