சேலம் மாணவன் மீண்டும் குளச்சலில் தஞ்சம்

குளச்சல், மே 31:  சேலம் மாவட்டம் சின்னம்மா பாளையத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் மகன் தமிழ் (20). அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்தார். பின்னர் படிப்பை தொடராமல் வீட்டில் இருந்து வந்தார். கடந்த 22ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய தமிழ், இருதினங்களுக்கு முன் குளச்சல் கடற்கரை பகுதிக்கு வந்தார். பசி எடுக்கவே சோதனைச்சாவடி ரோட்டிற்கு வந்து அங்கு நின்றவர்களிடம் சாப்பிட பணம் கேட்டார். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த த.மு.மு.க. நிர்வாகிகள் மாணவரிடம் முகவரி கேட்டனர். அப்போது மாணவன் சேலம் முகவரியை கூறினான். தந்தையின் செல்போன் எண்ணை கூறவில்லை. இதனால் த.மு.மு.க.வினர் சேலத்தில் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தமிழ் குறித்து தெரிவித்தனர்.சேலம் நிர்வாகிகள் அங்கு மாணவன் முகவரி குறித்து விசாரித்த போது மாணவன் மாயமான மறுநாள் தந்தை சேலம் சூரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் செய்திருப்பதும் தெரிய வந்தது. பின்னர் த.மு.மு.க.வினர் மாணவர் தமிழுக்கு இரவு உணவும், தங்குவதற்கு இடமும் கொடுத்தனர். இது குறித்து குளச்சல் போலீசார் சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மாணவனின் தந்தையும், தாயும் புறப்பட்டு நேற்றுமுன்தினம் குளச்சல் காவல் நிலையம் வந்து மாணவனை அழைத்து சென்றனர். ஆனால் மாணவன் நாங்குநேரியில் செல்லும் போது பஸ்சில் இருந்து இறங்கி தப்பி மீண்டும் குளச்சல் வந்து விட்டான். அவனை போலீசார் மீண்டும் பெற்றோரிடம் சேர்ப்பதா? அல்லது காப்பகத்தில் சேர்ப்பதா? என்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

Related Stories: