பைனான்சியர் கொலை வழக்கு நீதிமன்றத்தில் ரவுடி சரண் : மேலும் 3 பேர் கைது

அண்ணாநகர்: சேத்துப்பட்டு வைத்தியநாதன் தெருவை சேர்ந்த பைனான்சியர் ஆறுமுகம் (36),  கடந்த 18ம் தேதி ஷெனாய் நகர் பகுதியில் பைக்கில் சென்றபோது, 6 பேர், அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பினர். இந்த வழக்கு சம்பந்தமாக கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சரண்டைந்த பிரபல ரவுடி உஷ் (எ) சந்திரசேகர் (28), இவரது கூட்டாளி ரவுடி ரோகித்ராஜ் (32) ஆகியோரை, அமைந்தகரை போலீசார், காவலில் எடுத்து  விசாரணை செய்தனர். நேற்று விசாரணை முடிந்து இவர்களை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல  ரவுடி நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த மீன் (எ) பிரவீன்குமார் (28) நேற்று முன்தினம் சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைந்தார். இவர் மீது 2020ம் ஆண்டு வளசரவாக்கம் காவல்நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு உள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி இவர் சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த குணசேகரன் (எ) ஸ்டீபன் (30), செந்தில்குமார் (46), முகப்பேரை சேர்ந்த அஜித் (26) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.

Related Stories: