நாகை, மே 20: தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சுப் பணியாளர் சங்கம் சார்பில் நாகை வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம் முன்பு வாயிற்கூட்டம் நடந்தது. மாவட்ட துணை தலைவர் சீனிவாச ராவ் தலைமை வகித்தார். மகளிரணி அமைப்பாளர் அங்காள பரமேஸ்வரி வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் அந்துவன்சேரல், மாவட்ட துணை தலைவர் மேகநாதன், வட்டத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் பேசினர்.