சாயல்குடி, மே 3: கடலாடி பகுதியில் பொதுப்பணித் துறை கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர், உறுப்பினருக்கான தேர்தல் 2 இடங்களில் நடந்தது. முதுகுளத்தூர், கமுதி, கடலாடி ஆகிய 3 தாலுகாவை சேர்த்த பொதுப்பணி துறையின் குண்டாறு வடிநில கோட்டம், முதுகுளத்தூரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இதன் கீழ் பொதுப்பணித்துறை கண்மாய் பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கம் மொத்தம் 98 உள்ளது. இதில் கடலாடி தாலுகாவில் உள்ள 31 சங்கத்தில் 29 சங்கங்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் இ.நெடுங்குளத்திற்கு ஒரு தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கும், பி.கீரந்தை, பன்னந்தை, தத்தங்குடி,பூலாங்குளம் ஆகிய 5 கிராமங்களை உள்ளடக்கிய ஒரு சங்கத் தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடந்தப்பட்டது.