திருப்பரங்குன்றத்தில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல்

திருப்பரங்குன்றம், ஏப்.28: திருப்பரங்குன்றத்தில் திமுக சார்பில் இரண்டு இடங்களில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் முன்பு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. பகுதி செயலாளர் கிருஷ்ணபாண்டியன் தலைமையில் நடைபெற்ற விழாவில் எம்ஆர்பி.ஆறுமுகம் முன்னிலையில் மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் சுவிதாவிமல் நீர் மோர் பந்தலை திறந்து வைத்து தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு இளநீர் வழங்கினார். இதில் அணி அமைப்பாளர்கள் விமல், தென்பழஞ்சி சுரேஷ், நிர்வாகிகள் கருவேலம்பட்டி வெற்றி, பெருங்குடி வசந்த், சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகில் திமுக 97வது வட்டம் சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை மாமன்ற உறுப்பினர் உசிலை சிவா முன்னிலையில் மாமன்ற உறுப்பினர் சிவசக்திரமேஷ் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். இதில் மாவட்ட பிரதிநிதி ஏஎஸ்வி.ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: