வருசநாடு, ஏப். 22: தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் கண்டமனூர் புதுக்குளம், சிறுகுளம், கோவில்பாறை கண்மாய், கெங்கன்குளம், பஞ்சம்தாங்கி கண்மாய், நரியூத்து பெரியகுளம், செங்குளம், கடமான்குளம், சாந்தநேரி கண்மாய், அம்மாகுளம் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. இதில் ஒரு சில கண்மாய்களை மட்டும் தூர்வாரி, பல கண்மாய்களை தூர்வாரமல் உள்ளனர். இதனால், தோட்டங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகள், கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து பாசனத்திற்கு பாதிப்பு ஏற்படும். கிராமங்களுக்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.