வருசநாடு, ஏப். 22: வருசநாடு அருகே, சலவைக் கூடத்தில் உள்ள தொட்டிகளில் தண்ணீரை நிரப்பி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வருசநாடு ஊராட்சியில் உள்ள தர்மராஜபுரம் மூல வைகை ஆற்றுப்பகுதியில், சில ஆண்டுகளுக்கு முன்பு சலவை செய்வதற்கும், குளிப்பதற்கும் புதிய சலவைக் கூடம் கட்டப்பட்டது. இங்குள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பாமல், சலவைக் கூடம் பயன்பாடு இல்லாமல் உள்ளது.