நத்தம், ஏப். 20: நத்தம் அருகே பூதகுடி கிராமம், சடையம்பட்டியில் மலையாண்டி சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் காளையான சண்டியர் புகையிலைப்பட்டி, தவசிமடை, அலங்காநல்லூர், பாலமேடு, அரளிப்பாறை, சிராவயல் ஜல்லிக்கட்டுகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றுள்ளது. 18 வயதான இக்காளை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, நேற்று இறந்து போனது.