ஆயிரங்கண் மாரியம்மன் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றம்

அருப்புக்கோட்டை, ஏப். 7: அருப்புக்கோட்டை புளியம்பட்டி திருநகரம், சாலியர் மகாஜன பரிபாலனசபைக்கு பாத்தியப்பட்ட ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில், 101ம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் திருவிழா நடக்கும். ஒவ்வொரு நாளும் அம்மன் மண்டகப்படிதாரார்களால் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வருவார். வருகிற 12ம் தேதி பொங்கல் விழாவும், 13ம் தேதி அக்னிச்சட்டி செலுத்துதல்,

பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியும், 14ம் தேதி தேரோட்டமும், 15ம் தேதி பூப்பல்லாக்கு நிகழ்ச்சியும் நடைபெறும். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரிபாலனசபை தலைவர் சுந்தரமகாலிங்கம், துணைத்தலைவர் யோகா சுந்தர்ராஜன், செயலாளர் சோமசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Related Stories: