வலங்கைமான், ஏப். 2: வலங்கைமான் அடுத்த விருப்பாச்சிபுரம் ஊராட்சியில் மகளிர் திட்டம் மூலம் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 122 நபர்களுக்கு பணி நியமன ஆணையினை ஒன்றிய குழு உறுப்பினர் அன்பரசன் வழங்கினார்.
வலங்கைமான் அடுத்த விருப்பாச்சிபுரம் ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) தீன்தயாள் உபாத்யாய கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. ஒன்றியத்திற்கு உட்பட்ட 50 கிராம ஊராட்சிகளை ஒருங்கிணைந்து மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் லேகா தமிழ்ச்செல்வன் ஆலோசனையின்பேரில் மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர் தில்லைமணி கண்ணன் தலைமையில் நடைபெற்றது. தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் தட்சிணாமூர்த்தி, நகர செயலாளர் சிவனேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.