பாபநாசம் பேரூராட்சியில் ரூ.15 லட்சத்தில் பூங்கா அமைக்கும் பணி

பாபநாசம், மார்ச் 19: பாபநாசம் பேரூராட்சியில் ரூ 15 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பாபநாசம் பேரூராட்சியில் பெரியண்ணன் நகரில் 15வது மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியினை தஞ்சை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது உடன் பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் முத்தையா, சுகாதார ஆய்வாளர் பரமசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: