திருவையாறு, பிப்.17: திருவையாறு அடுத்த திருவேதிகுடியை சேர்ந்த மாரிமுத்து மகன் திரிசங்கு(29), கண்டியூரை சேர்ந்த மதியழகன் மகன் மகாதேவன்(20) ஆகிய இருவரும் 2 மாட்டு வண்டியில் கண்டியூர் குடமுருட்டி ஆற்றிலிருந்து அரசு அனுமதியில்லாமல் மணலை ஏற்றிக்கொண்டு அய்யம்பேட்டை ரோட்டில் சென்று கொண்டிருந்தது.அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருவையாறு சப்இன்ஸ்பெக்டர் ரேணுகா மற்றும் போலீசார் 2 மாட்டு வண்டிகளையும் மறித்து சோதனை செய்தபோது அரசு அனுமதியில்லாமல் மணல் அள்ளியது தெரியவந்தது.உடனே 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து திருவையாறு காவல் நிலையத்திற்கு கொண்டுவந்து வழக்கு பதிவு செய்து திரிசங்கு, மகாதேவன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கும்பகோணம், பிப்.17: கும்பகோணம் அருகே பாபநாசம் பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளது. அஞ்சல் வாக்கு பெட்டிக்கு சீல் வைத்தனர்.