பெரம்பூர்: பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 37வது வார்டு திமுக கூட்டணி கட்சி வேட்பாளரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வட சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லிபாபு நேற்று 37வது வார்டுக்குட்பட்ட இந்திரா நகர் நகர் குடியிருப்பு, நெசவாளர் குடியிருப்பு, கிழக்கு மத்திய குறுக்குதெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்தே சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அப் பகுதி இளைஞர்கள் தங்களுக்கு விளையாட போதுமான இடம் இந்த பகுதியில் கிடையாது. எனவே கால்பந்தாட்ட மைதானம் ஒன்றை ஏற்படுத்தி தருமாறு வேட்பாளரிடம் கோரிக்கை வைத்தனர்.