அம்பத்தூர், பிப்.12: அம்பத்தூர் மண்டலம், 83வது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் உஷா நாகராஜ், நேற்று தாதாங்குப்பம் எஸ்.ஆர்.பி காலனியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அவருக்கு பொதுமக்கள் மாலை, சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது வேட்பாளர் உஷா நாகராஜ் பொதுமக்களிடம் கூறுகையில், ‘அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ ஆகியோரின் ஒத்துழைப்புடன் தாதாங்குப்பத்தில் மழைநீர் தங்கு தடையின்றி வெளியேற வடிகால் வசதி செய்து தருவேன்.