சென்னை: சென்னை மாநகராட்சி 141வது வார்டு திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன் கண்ணம்மாபேட்டையில் உள்ள கார்பரேஷன் காலனியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, கண்ணம்மாபேட்டை தகன மேடையில் புகை போக்கி குழல் பராமரிக்கப்பட வேண்டும், சுகாதார பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும், தெரு நாய்கள் பராமரிப்பு மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும், வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும், சாலைகளை சீரமைக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.நான் வெற்றி பெற்றவுடன் அனைத்து கோரிக்கைகளையும் நிச்சயம் நிறைவேற்றுவேன், என ராஜா அன்பழகன் உறுதியளித்தார். மேலும், ஏழை எளிய மாணவ மாணவிகளின் கல்வித்தரம் மேம்பட இலவச கணினி பயிற்சி மையம் அமைப்பேன், காரிய மண்டபம், உடற்பயிற்சி கூடம், சிறுவர் விளையாட்டு திடல், சிசிடிவி கேமராக்கள் அமைப்பேன்.