தர்மபுரி: தர்மபுரியில், கொய்யா சீசன் துவங்கியுள்ளதால் விற்பனை சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை மற்றும் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொய்யா பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் 200 ஏக்கருக்கு மேல் கொய்யா சாகுபடி செய்துள்ளனர். கடந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால், விளைச்சல் அதிகரித்துள்ளது. தற்போது, அறுவடை முழுவீச்சில் நடைபெற்று வருவதால், சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது.