சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு போதையில் பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்ட காவலர், தட்டிக்கேட்ட ஆர்பிஎஸ் போலீசாரை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை பெரியமேடு காவல் நிலைய குற்றப்பிரிவில் காவலராக பணிபுரிபவர் சபரி குமார். இவர், நேற்று முன்தினம் சீருடை அணிந்த நிலையில் மது அருந்திவிட்டு, சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம் சென்றுள்ளார். பின்னர், அங்கு வந்த பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை பார்த்த ஆர்பிஎஸ் வீரர்கள், காவலர் சபரிகுமாரை மடக்கி, ஏன் பயணிகளிடம் தகராறு செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.