திருத்துறைப்பூண்டி பகுதியில் 3 கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

திருத்துறைப்பூண்டி, ஜன.21: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் 3 கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருத்துறைப்பூண்டி அருகே மணலி கடைத்தெருவில் உள்ள செல்வ விநாயகர்கோயிலில் நேற்றுமுன்தினம் இரவு மர்மநபர் உண்டியல் பூட்டை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச் சென்று விட்டனர். இதேபோல் மேட்டுப்பாளையம் மாரியம்மன் கோயில், விளக்குடி குளத்தருகே உள்ள பிள்ளையார்கோயில் ஆகிய கோயில்களில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றுவிட்டனர்.இதுகுறித்து புகாரின்பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குபதிவு செய்து திருட்டுப்போன பணம் எவ்வளவு என்றும், கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: