நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி காரைக்குடியில் திமுக நேர்காணல் இன்று நடக்கிறது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுகவினருக்கான நேர்காணல் இன்று (ஜன.11) காரைக்குடியில் நடக்க உள்ளது. இது குறித்து திமுக மாவட்ட செயலாளர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் விடுத்துள்ள அறிக்கை: நடைபெற உள்ள பேரூராட்சி, நகராட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனு செய்துள்ள திமுகவினரிடம் இன்று மாலை 3 மணியளவில் காரைக்குடியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகமான கலைஞர் பவளவிழா மாளிகையில், பசும்பொன் தா.கிருட்டிணன் அரங்கில், மாவட்ட கழக நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெறுகிறது. எனவே, பேரூராட்சி, நகராட்சி வார்டுகளில் போட்டியிட விண்ணப்பம் அளித்தவர்கள் இந்த நேர்காணலில் நேரில் கலந்து கொள்ள வேண்டும். நேர்காணலில் கலந்துகொள்ளும் திமுகவினர் தொடர்புடைய, சம்பந்தப்பட்ட ஒன்றிய, பேரூர் கழகச் செயலாளர்களும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: