ராஜபாளையம் பஞ்சு ஆலையில் தீ

ராஜபாளையம்: ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதியில் விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான மருத்துவ துறைக்கு பயன்படுத்தும் பஞ்சு உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இந்த பஞ்சு சேமிப்பு கிடங்கில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்து மளமளவென எரிய துவங்கியது. தகவலறிந்து வந்த ராஜபாளையம் தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.6 லட்சம் பஞ்சுகள் தீயில் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: