மேலூர், ஜன.3: மேலூர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் புதிய கடைகளை விரைந்து அமைத்து, கடைகளை ஒதுக்க வேண்டும் என வியாபாரிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மேலூர் செக்கடி பகுதியில் 30 வருடங்களுக்கு முன்பு தினசரி காய்கறி மார்க்கெட் கடைகள் அமைக்கப்பட்டது. மக்கள் தொகைக்கு ஏற்ப இக்கடைகள் போதுமானதாக இல்லை என கூறி, மார்க்கெட் செல்லும் சாலையின் இருபுறமும் சாலை ஓர காய்கறி கடைகள் ஏராளமாக முளைத்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து எப்போதும் சிக்கலான நிலையில் காணப்படும். காய்கறி கடைகளின் கட்டிடம் மிகவும் சேதமாகி, பயன்படுத்த முடியாத நிலைக்கு செல்ல, அங்கு புதிய கடைகள் கட்ட உள்ளதாக நகராட்சி சார்பில் சில வருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.