விராலிமலை அருகே பைக் மோதி தொழிலாளி பலி

விராலிமலை, டிச.27: விராலிமலை-மதுரை நான்கு வழி சாலையில் நடந்து சென்ற தொழிலாளி மீது பைக் மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர். விராலிமலை அருகே உள்ள மேடுகாட்டுபட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் கண்ணப்பன் (44). இவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விராலிமலை அருகேயுள்ள விராலூர் கடைவீதிக்கு வந்துவிட்டு மீண்டும் ஊர் திரும்ப நான்கு வழிச்சாலையை கடக்க முற்பட்டார். அப்போது மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற பைக் கண்ணப்பன் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பைக் ஓட்டி வந்த திருச்சி கண்டோன்மெண்ட் தாஸ் மகன் ரிச்சர்டு விஸ்வநாத் மற்றும் பின்னால் அமர்ந்து வந்த ஜஸ்டின் மகன் பிராட்ரிக் தாமஸ் உள்ளிட்ட இருவர் காயமடைந்து திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து நிகழ்விடம் சென்ற விராலிமலை போலீசார் உயிரிழந்த கண்ணப்பணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: