உசிலம்பட்டி, டிச. 24: உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை சேர்ந்தவர் பிரியங்கா. இவரை அருகேயுள்ள மூணான்டிபட்டியை சேர்ந்த ரஞ்சித் என்ற காசி என்பவர் அணுகி, தான் வருவாய் துறையில் பணியாற்றி வருவதாகவும், அங்கன்வாடி பணியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி ரூ.3 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இதேபோல் பிரியாவின் தம்பியான முத்துக்குமாருக்கும் கலெக்டர் அலுவலகத்தில் ஓஏ (கிளார்க்) வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் என மொத்தம் ரூ.7 லட்சம் வரை பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் அரசு முத்துரையுடன், கலெக்டர், துணை கலெக்டர் கையொப்பம் இட்டது போல் ஒரு பணிநியமன ஆணை வழங்கியதாக தெரிகிறது.