மனைவியிடம் வரதட்சணை கொடுமை கணவருக்கு ஓராண்டு சிறை

நெல்லை, டிச. 23: களக்காடு மாவடியை சேர்ந்தவர் முத்துக்குட்டி. இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த பிரபா (34) என்பவருக்கும் 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் முத்துக்குட்டியின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி பிரபாவை வீட்டை விட்டு வெளியேற்றினர். இதுகுறித்து பிரபா நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி முத்துக்குட்டி உள்பட அவரது உறவினர்கள் 7 பேர் மீது வழக்கு பதிந்தனர். முத்துக்குட்டியும் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி பிரகாஷ் விசாரித்து குற்றம்சாட்டப்பட்ட முத்துக்குட்டிக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

Related Stories: