மானாமதுரை, டிச.20: மானாமதுரை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மானாமதுரை அரசு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் சிறப்பு கூட்டம் தலைவர் அமல்ராஜ் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் நாராயணமூர்த்தி முன்னிலை வகித்தார். பொருளாளர் சோமசுந்தரம் வரவேற்றார். சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மானாமதுரை பேரூராட்சியினை நகராட்சியாக தரம் உயர்த்தி உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின், அமைச்சர், எம்எல்ஏ உள்ளிட்ட பலருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.