வள்ளியூர், டிச. 17: வள்ளியூர் பழைய பஸ் நிலையம் அருகே கூட்டுறவு நகைகடன் வங்கி வளாகத்தில் புதிதாக தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட கூட்டுறவு மருந்தகம் திறப்பு விழா நடந்தது. தமிழகத்தில் செயல்படும் அனைத்து கூட்டுறவு வளாகங்களிலும் அமைக்கப்பட்ட கூட்டுறவு மருந்தகங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். இதைத் தொடர்ந்து வள்ளியூர் பழைய பஸ் நிலையம் அருகே கூட்டுறவு நகைகடன் வங்கி வளாகத்தில் புதிதாக தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட கூட்டுறவு மருந்தகம் திறந்துவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விழாவில் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஸ், வள்ளியூர் யூனியன் சேர்மன் சேவியர் ராஜா ஞானதிரவியம் ஆகியோர் குத்துவிளக்குகேற்றி முதல் விற்பனையை துவக்கிவைத்தனர்.