முத்துப்பேட்டை,டிச.13: முத்துப்பேட்டை அடுத்த செங்காடு கிராமத்திற்கு பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி வழித்தடங்களில் அரசு பேருந்து இயக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. முத்துப்பேட்டை அடுத்த அடுத்த செங்காங்காடு கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 14-வது கிளை மாநாடு நிர்வாகிகள் மதியழகன், லோகநாதன் ஆகியோர; தலைமையில் நடைபெற்றது. இதில் எம்எல்ஏ மாரிமுத்து சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு பேசினார். இதில் இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான செங்காங்காடு கிராமத்திற்கு பட்டுக்கோட்டை மற்றும் திருத்துறைப்பூண்டி வழித்தடங்களிருந்து அரசு பேருந்து இயக்க வேண்டும், துரைதோப்பு பத்தர் கடை ஸ்டாப் முதல் செங்காங்காடு வரை உள்ள சாலையை அகல தார்சாலையாக மாற்றி தரவேண்டும், மயான சாலையை சீரமைத்து தரவேண்டும், அரசு துவக்கப்பள்ளியில் பழுதடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய வகுப்பறை கட்டடம் கட்டித்தரவேண்டும் உள்ளிட்ட தீரமனங்கள் நிறைவேற்றப்பட்டன இதில் ஒன்றிய செயலாளர் முருகையன், அரசு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி உட்பட கட்சியினர் கலந்துக்கொண்டனர்.