பெரம்பூர்: புளியந்தோப்பு அம்பேத்கர் கல்லூரி சாலையில் இரவு நேர பிரியாணி கடை செயல்பட்டு வருகிறது. இங்கு, இரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை பிரியாணி சாப்பிட பல்வேறு பகுதியில் இருந்தும் இளைஞர்கள் மற்றும் சாப்ட்வேர் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இவர்களில் பலர் மது போதையில் வந்து செல்வதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 2 மணி அளவில் இச்சாலை வழியாக அதிவேகமாக வந்த சொகுசு கார், தறிகெட்டு ஓடி சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பாடி வண்டிகள் மீது மோதியது. பின்னர், சென்டர் மீடியனில் மோதி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.