நெல்லை, டிச.6: பாளையில் மகரஜோதி பாதயாத்திரை பக்தர்கள் குழு சார்பில் பூக்குழி மற்றும் அன்னதான விழா நடந்தது. பளை வடக்குப்படை முப்பிடாதி அம்மன் கோயிலில் மகரஜோதி பாதயாத்திரை பக்தர்கள் குழு சார்பில் 14ம் ஆண்டு பூக்குழி அன்னதான விழாவையொட்டி காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து அபிஷேக, அலங்கார தீபாராதனை இடம் பெற்றது. பின்னர் பாளை கோட்டூர் ரோடு சோனா மகாலில் சிறப்பு அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை அன்னதான குழுவினர் செய்திருந்தனர்.