பெண்ணுக்கு இறந்தே குழந்தை பிறந்ததால் உறவினர்கள் புகார்

சேலம், டிச. 5: சேலம் அருகே இரும்பாலை அருகே உள்ள கொல்லப்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சுமிதா(27). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, அந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உறவினர்கள் சுமிதாவை அழைத்துச் சென்றனர்.

பின்னர், நேற்று அதிகாலை 1.40 மணிக்கு சுமிதாவுக்கு இறந்த நிலையில் பெண் குழந்தை பிறந்தது. மேலும், அவருக்கு அதிக அளவில் ரத்த போக்கு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுமிதா உறவினர்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், சுமிதாவை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, சுமிதாவின் உறவினர்கள், தவறான சிகிச்சையால் தான் பெண் குழந்தை இறந்து பிறந்ததாக சேலம் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் அலுவலகத்தில் புகார்  கொடுத்துள்ளனர்.இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: