திமுக தண்ணீர்பந்தல் திறப்பு

காரைக்குடி, ஏப்.16: காரைக்குடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படியும், மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்எல்ஏ ஆலோசனையின்படி தண்ணீர், நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. நகர செயலாளர் குணசேகரன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் தலைமை வகித்து துவக்கிவைத்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார், முன்னாள் நகர்மன்ற தலைவர் முத்துத்துரை, திமுக நிர்வாகி நாதன், துணைசெயலாளர் கண்ணன், வர்த்தக அணி கென்னடி, சிறுபான்மை அணி மைக்கேல், சசிவர்ணன், முன்னாள் கவுன்சிலர் சன் சுப்பையா, நகர இளைஞரணி மூர்த்தி, ஜெபதுரை, திமுக நிர்வாகிகள் சேவியர், பிரசன்னா, செந்தில், தாய் சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: