வி.கே.புரம், ஏப். 15: சித்திரை விசு தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் பாபநாசம் கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள உலகம்மை சமேத பாபநாச சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை விசு திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான திருவிழா, கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால், பாபநாசம் கோயிலில் தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லையென அறிவிக்கப்பட்டிருந்தது. 9ம் திருவிழாவான நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெறவில்லை. நேற்றிரவு தெப்ப உற்சவமும் ரத்து செய்யப்பட்டது.