திருவாரூர், ஏப்.14: திருவாரூர் அடுத்த பேரளம் அருகே கோயில் கந்தன்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி பிரமோற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த பிரமோற்சவத்தின் 10வது நாளான பவுர்ணமியன்று உச்சிக்கால மஹாபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். 9ம் நாளன்று திருத்தேர் விழா நடைபெறும். கொரோனா தொற்று காரணமாக கடந்தாண்டு தேர் திருவிழா நடைபெறவில்லை.