ஓசூரில் பைக் மோதியதால் விபரீதம் தம்பதி உள்பட 4 பேரை வீடு புகுந்து தாக்கினர்

ஓசூர், ஏப்.13: ஓசூரில், பைக் மோதிய விபத்து தொடர்பான தகராறில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை கொலை செய்ய முயன்ற 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் மூக்கண்டப்பள்ளி அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி ரூபா(21). அதே பகுதியைச் சேர்ந்தவர் கவுரம்மா(50). இவர்கள் அருகருகேயுள்ள வீடுகளில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில், கடந்த 9ம் தேதி மாலை, கவுரம்மாவின் மகன் ராஜ்குமார் (29) என்பவர் குடிபோதையில் டூவீலரை ஓட்டி வந்து, சக்திவேல் மீது மோதினார். இதனால், அவர்கள் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து விலக்கி விட்டனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், அவரது சகோதரர்கள் சக்ரவர்த்தி(26), மதன்(24) மற்றும் தாயார் கவுரம்மா உள்ளிட்டோர், சக்திவேல், அவரது மனைவி ரூபா, சக்திவேலின் தந்தை மணி(60), தாய் சாந்தம்மா(55) ஆகியோரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர்.

இதில் 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்

இது தொடர்பாக ரூபா கொடுத்த புகாரின் பேரில், ஓசூர் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தி, கவுரம்மா, மாதன், ராஜ்குமார், சக்கரவர்த்தி ஆகிய 4 பேர் மீதும் ஆபாசமாக பேசுதல், கொலை முயற்சி, தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: