காரைக்கால் மாவட்டத்தில் 6,954 பேருக்கு கொரோனா தடுப்பூசி

காரைக்கால், ஏப்.8: இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி 2 தவணைகளாக போடப்படுகிறது. காரைக்காலில் முதல் தவணையாக சுகாதாரப் பணியாளர்கள் 1321 பேருக்கும், முன்களப்பணியாளர்கள் 1639 பேருக்கும் 60 வயதுக்கும் மேற்பட்டோர் 2226 பேருக்கும் 45 வயது முதல் 59 வயது வரை இணை நோய்கள் உடையவர்கள் 1189 பேருக்கும் என 6375 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டாம் தவணையாக சுகாதாரப் பணியாளர்கள் 430 பேருக்கும், முன்களப்பணியாளர்கள் 137 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 60 வயதுக்கும் மேற்பட்ட 8 பேருக்கும் 45 வயது முதல் 59 வயது வரை இணை நோய்கள் உள்ளவர்கள் 4 பேருக்கும் என 579 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டு தவணைகளையும் சேர்த்து 1751 சுகாதார பணியாளர்களுக்கும், 1776 முன் களப்பணியாளர்கள், 2234 பேர் 60க்கும் மேற்பட்டோர் மற்றும் 45 வயது முதல் 59 வயது வரை இணை நோய்கள் உள்ளவர்கள் 1193 பேர் என இதுவரை மொத்தம் 6954 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Related Stories: