அம்பத்தூரில் அரசு பொது மருத்துவமனை: ஜோசப் சாமுவேலை ஆதரித்து மனைவி பிரசாரம்

அம்பத்தூர்: அம்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலை ஆதரித்து அவரது மனைவி பத்மாவதி தலைமையில் குடும்பத்தினர் நேற்று பாடி, முகப்பேர், மண்ணூர்பேட்டை, மங்களபுரம், அத்திப்பட்டு ஆகிய இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது, பத்மாவதி பேசுகையில், ‘திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அம்பத்தூரில் படுக்கை வசதியுடன் கூடிய அரசு பொது மருத்துவமனை அமைக்கப்படும். இங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கலைக் கல்லூரி ஆகியவை கொண்டு வரப்படும். அத்திப்பட்டு குப்பை கிடங்கு அகற்றப்படும். அம்பத்தூர் தொழிற்பேட்டை சாலைகள் சீரமைக்கப்படும். பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்,’ என்றார்.

பிரசாரத்தின்போது, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் பி.கே.மூர்த்தி, அம்பத்தூர் பகுதி செயலாளர்கள் டி.எஸ்.பி.ராஜகோபால், எம்.டி.ஆர்.நாகராஜ்,  மாவட்ட ஆதிதிராவிடர் நல அமைப்பாளர் எல்.பி.எப்.மோகன், மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர் சாந்தகுமாரி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாலமுருகன், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பீர்முகம்மது, மோகனரங்கன், லோகபிரான், மாரியப்பன், முருகன், பால்சாமி, லெனின்சுந்தர், கவுரிசங்கர், இப்ராஹிம், தாமோதரன், ஜஸ்டின், கார்வின், திமுக வட்ட செயலாளர்கள் எம்.இ.சேகர், பிரகாஷ், டிக்கா, சீனிவாசன், லோகநாதன், நெப்போலியன், சுந்தர்ராஜ், விஜயகுமார், சண்முகம், லால், கமல், கண்ணபிரான், நவராஜ்ரவி, ரகு, ராதாகிருஷ்ணன் மற்றும் ஆசை ராஜா உள்பட கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: