பெரம்பூர்: பெரம்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி
நேற்று இருசக்கர வாகனம் மூலம் கொடுங்கையூர் சின்னாண்டி மடம், பார்வதி நகர், கண்ணதாசன் நகர், மணலி சாலை, வியாசர்பாடி பி.வி.காலனி, சர்மா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் மக்கள் மத்தியில் பேசுகையில், ‘தொகுதியில் தீர்க்கப்படாத பிரச்னைகள் நிறைய உள்ளன. நான் வாக்கு சேகரிக்க சென்ற இடங்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுத்துள்ளனர்.