ஆத்தூர், ஏப்.4: ஆத்தூரில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த மணிமாறன்(32) என்பவரை ஆத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா சங்கர், கடந்த வருடம் கைது செய்தனர். அதன்பிறகு கடந்த மாதம் மீண்டும் விபசார வழக்கில் கைது செய்யப்பட்ட மணிமாறன் போலீஸ் பிடியில் இருந்து தப்பினார். தொடர்ந்து 19.03.21 அன்று மீண்டும் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.