ஏப்.6 வாக்குப்பதிவு நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது புகார் தெரிவிக்கலாம் தொழிலாளர் துறை தகவல்

சாயல்குடி. ஏப். 3:  ராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு நாளான 6ம் தேதி தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது புகார் தெரிவிக்கலாம் என தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன் கூறுகையில், ‘ மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் அறிவுரையின்படி ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு, பொதுத்துறை நிறுவனங்கள், கட்டுமானம், ஓட்டுனர் உள்ளிட்ட அனைத்து அமைப்பு சார தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக ஏப் 6ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காதவர்கள், நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்காதவர்கள் மீது 04567- 221833, 9442229502 என்ற தொலைபேசி, செல் நம்பர்களில் தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கலாம்’ என்றார்.

Related Stories: