புளியங்குடி, ஏப்.3: புளியங்குடி அருகே எலுமிச்சை தோட்டத்தை உழுதபோது டிராக்டர் சக்கரத்தில் சிக்கி டிரைவர் பரிதாபமாக இறந்தார். புளியங்குடி அடுத்த ரத்தனபுரியைச் சேர்ந்த முத்துசாமி மகன் செல்வகுமார்(38). இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை ரத்தனபுரி அருகிலுள்ள ஒருவரது எலுமிச்சை தோட்டத்தை ரோட்டோ வேட்டர் என்ற கருவி மூலம் உழுது முடித்துவிட்டு வெளியில் வரும்போது ரோட்டோ வேட்டர் சக்கரத்தில் செடிகள் சிக்கியதாக தெரிகிறது. அதனை எடுப்பதற்காக செல்வகுமார் குணிந்தபோது கைலி ரோட்டோ வேட்டர் சக்கரத்தில் சிக்கியதால் அவரை உள்ளே இழுத்தது.