தொற்று நோய் பீதியில் பொதுமக்கள் உத்தரகாண்ட் டேராடூன் ராணுவ கல்லூரியில் 8ம் வகுப்பு சேர்க்கை

திருவாரூர், ஏப்.2: திருவாரூர் கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜனவரி 2022ம் ஆண்டிற்கான 8ம் வகுப்பு ஆண் மாணவர்கள் சேர்க்கைக்கான தேர்வானது வரும் ஜூன் 5ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் சேர விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் தமிழகத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 2022 ஜனவரி 1ம் தேதியன்று பதினொன்றரை வயது நிரம்பியவராகவும், 13 வயதை அடையாதவராகவும் இருத்தல் வேண்டும். 1.1.2022ல் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 7ம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும். இத்தேர்விற்கான விண்ணப்பப்படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பை கமாண்டன்ட், ராஷ்ட்ரிய ராணுவக் கல்லூரி, டேராடூன், உத்தரகாண்ட், அஞ்சல்:248003 என்ற முகவரிக்கு விரைவு அஞ்சல் வாயிலாக எழுத்து மூலம் விண்ணப்பித்து, கமாண்டன்ட் டெல் பவன், எஸ்பிஐ வங்கி கிளையில் (வங்கி குறியீடு-01576) செலுத்தத்தக்க வகையில் பொதுப்பிரிவினர் ரூ-600க்கும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் சாதிச்சான்றுடன் ரூ.555க்கும் கேட்பு காசோலையை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் (இரட்டையாக) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையச் சாலை, ரங்கா நகர், சென்னை- 600003 என்ற முகவரிக்கு வரும் 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: