காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. வரும் சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்களை சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்தப்பட உள்ளனர். இப்பணிக்கு செல்ல விருப்பமும் உடல் திடகாத்திரமும் உள்ள 70 வயதுக்கு உட்பட்ட முன்னாள் படைவீரர்கள் அனைவரும் உடனடியாக தங்களது பெயரை அசல் படைவிலகல் சான்று, அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் வந்து https://bit.ly/Details of Retired Personnel reported for TNAE 2021 என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.