அமமுக வேட்பாளர்களை ஆதரித்து புளியங்குடி, கடையநல்லூரில் இன்று டிடிவி தினகரன் பிரசாரம்

கடையநல்லூர், ஏப்.1: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (1ம்தேதி) தென்காசி வருகிறார். கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். தென்காசி வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் பொய்கை சோ.மாரியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்காசி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அமமுக சார்பில் அய்யாத்துரை பாண்டியனும், வாசுதேவநல்லூர் தொகுதியில் வேட்பாளர் தங்கராஜும் போட்டியிடுகின்றனர்.  இவர்களை ஆதரித்து குக்கர் சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பிரசாரம் மேற்கொள்ள கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று தென்காசி வருகிறார். மாலை 4 மணிக்கு வாசுதேவநல்லூர் தொகுதி வேட்பாளர் தங்கராஜை ஆதரித்து புளியங்குடி காமராஜர் சிலை முன்பும், கடையநல்லூர் மணிக்கூண்டு முன்பு வேட்பாளர் அய்யாத்துரை பாண்டியனை ஆதரித்து மாலை 4.30 மணிக்கும் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாக்கு சேகரித்து உரையாற்றுகிறார். இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி செயலாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: