தாம்பரம்: பல்லாவரம் தொகுதி திமுக வேட்பாளர் இ.கருணாநிதி நேற்று மாலை பொழிச்சலூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் மக்கள் மத்தியில் பேசுகையில், பொழிச்சலூர் ஊராட்சி சென்னை விமான நிலையம் அருகே இருந்தாலும், போதிய வருமானம் இல்லாததால் இந்த பகுதியில் சாலை, குடிநீர் என எதுவும் இல்லாமல் 40 ஆண்டு காலமாக மிகவும் பின்தங்கிய பகுதியாகவே இருந்தது.நான் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றவுடன் மாவட்ட ஆட்சியரிடம் சிறப்பு நிதியை பெற்று இந்த பகுதிகளில் புதிய தார் சாலைகள், சிமென்ட் சாலைகள், மழைநீர் கால்வாய்கள், நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சிறு மின்விசை நீர்த்தேக்க தொட்டிகள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் என 40 ஆண்டுகளாக பின்தங்கியிருந்த பகுதியை 5 ஆண்டுகளில் வளர்ச்சி அடைய செய்துள்ளேன்.