திருவொற்றியூர்: மாதவரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் மாதவரம் வி.மூர்த்தி, மாதவரம் மண்டலம் 24 மற்றும் 31வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். பொதுமக்கள் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பளித்து, வெற்றிபெற வாழ்த்தினர். அப்போது மாதவரம் வி.மூர்த்தி மக்கள் மத்தியில் பேசுகையில், ‘நான் அமைச்சராக இருந்தபோது இந்த பகுதியில் சாலை, பாதாள சாக்கடை, குடிநீர் போன்ற பல திட்டங்களை கொண்டு வந்தேன். மீண்டும் நான் வெற்றி பெற்றால் இந்த பகுதியில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, மழைநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகளை முழுமையாக செய்து தருவேன்.