குஜிலியம்பாறை, மார்ச் 30: குஜிலியம்பாறை அருகே, ராமகிரியில் 15 ஆண்டுகளுக்கு பிறகு கல்யாண நரசிங்க பெருமாள் கோயில் தேரோட்டம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
குஜிலியம்பாறை அருகே, ராமகிரியில் 600 ஆண்டு பழமை வாய்ந்த கல்யாண நரசிங்கப் பெருமாள் கோயில் தேரோட்ட திருவிழா மார்ச் 21ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்பின் தினசரி மண்டகப்படிதாரர்களின் வாகன புறப்பாடு, சாமி வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இந்நிலையில், முக்கிய நிகழ்வான கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி, காலையில் கோயிலில் இருந்து எம்பெருமாள், தேவி, பூதேவி ஆகியோரின் சிலைகள் பூஜை செய்து எடுத்து வரப்பட்டு, திருத்தேரில் வைக்கப்பட்டது. காலை 9.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.